Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிரந்தரத் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கல்

நவம்பர் 08, 2023 08:02

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சியில் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றும் 150  ஆண், பெண் தூய்மைப் பணியாளர்களுக்குத் தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கு புடவை, சீருடை, ஜாக்கெட் மற்றும் தையல் கூலி, இதே போல் ஆண் பணியாளர்களுக்கு கால் சட்டை, மேல் சட்டை ஆகியவற்றிற்கான துணிகள் தையல் கூலி ஆகியவை வழங்கப்பட்டன.

திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளர் சேகர், நகர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆகியோர் புத்தாடைகளையும் இனிப்புகளும் வழங்கினார்கள், நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், செல்லம்மாள் தேவராசன், செல்வி ராஜவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்